சிரியா தலைநகர் Damascus ன் புறநகர்ப் பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி அந்நகரை சுற்றிவளைத்துள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி Bashar al-Assad அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டுப் போரில் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ஜனாதிபதி Bashar al-Assad தலைமையிலான இராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இந்த சூழலில், கிளர்ச்சிப் படையினர் திடீரென தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கடந்த வாரம் கைப்பற்றினர்.
சிரியாவின் முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கைப்பற்றிய நிலையில் தலைநகர் Damascusயும் சுற்றிவளைத்தனர்.
இந்த நிலையில், சிரிய ஜனாதிபதி Bashar al-Assad நாட்டிலிருந்து தப்பிச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.