சிறுவர் பகல்நேரப் பராமரிப்பு தொடர்பில்- கலந்துரையாடல்
சிறுவர் பகல்நேரப் பராமரிப்பு தொடர்பில்- கலந்துரையாடல்

(எழிலன்)  
சிறுவர் பகல்நேரப் பராமரிப்பு வசதிகள் பற்றிய தேசிய கொள்கை தொடர்பில் மாகாணத்தலைமை செயலாளர்களுடன் கலந்துரையாடல்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பகல்நேரப்
பராமரிப்பு வசதிகள் பற்றிய தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாகாணத்
தலைமை  செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்  (சட்டத்தரணி) தலதா அத்துகோரல தலைமையில் சிறுவர்கள்,
பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில்
கூடிய போதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
13 ஆம் திருத்தத்துக்கு அமைய சிறுவர் சம்பந்தப்பட்ட விடயம் மாகாண சபைகளின்
விடயப்பொறுப்பின் கீழ் வருவதால் இந்தத் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்
காணப்படும் சட்டரீதியான சிக்கல்கள் தொடர்பில் குழுவின் முன்னைய அமர்வில் கவனம்
செலுத்தப்பட்டது. அதற்கமைய, மாகாணத்தலைமை  செயலாளர்கள் மற்றும் சட்டமா அதிபர்
பணிமனையின் கருத்துக்களைப் பெறும் வகையில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் மாகாண தலைமை செயலாளர்கள், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும்
சமூக வலுப்படுத்துகை அமைச்சு, சட்டமா அதிபர் பணிமனை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார
சபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் பணிமனை என்பவற்றின்
அதிகாரிகளும், வெரிட்டே ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் மேற்பார்வைக்
குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அத்துடன், மாகாண
சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு ஆணையாளர்கள் ஒன்லைன் தொழிநுட்பத்தினூடாகவும்
கலந்துகொண்டார்.
அதற்கமைய, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை தொடர்பான விடயம் மாகாண சபைகளின் கீழ்
வருவதாகத் தெரிவித்த சட்டமா அதிபர் பணிமனையின் பிரதிநிதி, எவ்வாறாயினும் தற்பொழுது
மாகாண சபைகள் நிறுவப்படவில்லை என்பதால் மத்திய அரசுக்கு இது தொடர்பில் நடவடிக்கை
எடுக்க முடியும் என குழுவில் அறிவித்தார். அத்துடன், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தால்
அதனை மாகாண சபைகளிலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இல்லை என இதன்போது
மாகாண தலைமை செயலாளர்கள் சுட்டிக்காட்டினர். 

மேலும், சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு வசதிகள் பற்றிய தற்போதைய நடைமுறைகளை குழுவில் விளக்கமளித்த மாகாணப் தலைமை செயலாளர்கள் தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழு நாட்டுக்கும் பொதுவான நடைமுறையை செயற்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, இந்தத் தேசிய கொள்கையை மாகாண ஆளுநர்களுக்கும் முன்வைத்து அதற்கான
அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தலதா அத்துகோரல ஆலோசனை வழங்கினார்.

அதற்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பிலும் அது
தொடர்பில் செயற்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில்
விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான  ரோஹிணி குமாரி விஜேரத்ன மற்றும்  டீ. வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.(ப)

#eelamnews #newsupdate #Uthayanpaper #sudaroli #sanjeevi #uthayannews #jaffnannews

148 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.