நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்கள் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில், நுவரெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தின் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆலயத்தில் உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தில் பிரதான காரியாலயத்திலிருந்த சி.சி.டி.வி. கெமராவின் முழு இணைப்பையும் துண்டித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஆலயத்தின் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கெமராக்களை அடிப்படையாக கொண்டு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.