ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், சுப்பர் பந்துப்பரிமாற்றத்தில் வைத்து ராஜஸ்தான் றோயல்ஸை தோற்கடித்தது டெல்லி கப்பிட்டல்ஸ்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 5 இலக்குகளை இழந்து 188 ஓட்டங்களைப் ஓட்டங்களைப் பெற்றது. கடந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய கருண் நாயர் நேற்று ஓட்ட மெதையும் பெறாமல் ரண்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அபிஷேக் போரல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும். கே.எல்.ராகுல் 38 ஓட்டங்களையும், ஸ்ரப்ஸ் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் தலா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் 20பந்துப்பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இறுதி பந்துப்பரிமாற்றத்தில் 9 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற நிலையில், ஸ்ராக் அற்புதமாகப் பந்துவீசி எதிரணியைக் கட்டுப்படுத்தினார். அதி கபட்சமாக, ராணா, ஜெயஸ்வால் இருவரும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றனர்.
சுப்பர் ஓவர்...
சுப்பர் பந்துப்பரிமாற்றத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 5 பந்துகளில் 11 ஓட்டங்களைப் பெற்று இரண்டு இலக்குகளை இழந்தது. சுப்பர் பந்துப்பரிமாற்றத்தில் இரண்டு இலக்குகளை இழந்தால், அது அனைத்து இலக்குகளையும் இழந்தமைக்கு நிகராகக் கருதப்படும். ஆதலால், டெல்லிக்கு 12 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயமானது. கே. எல்.ராகுல் மற்றும் ஸ்ரப்ஸ் இருவரும் களமிறங்கினார்கள். முதல் மூன்று பந்துகளில் 2, 4, 1 என 7 ஓட்டங்களைப் பெற்றார் ராகுல். நான்காவது பந்தை சிக்சருக்கு அனுப்பி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார் ஸ்ரப்ஸ்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.