யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி வளைவுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையாவிளக்குப்போராட்ட நினைவுத் தூபி நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதபுதைகுழி மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவாகரத்துக்குச் சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுக்கு அருகில் கடந்த கடந்த ஜூன் மாதம் அணையாவிளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'மக்கள் செயல்' எனும் தன்னார்வ அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் நாடளாவிய ரீதியில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் பெரியளவில் பேசுபொருளானது. இந்தப் போராட்ட ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருந்த தூபியே தற்போது உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டுக்குப் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூபியைச் சீரமைக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அந்தத் தூபி மீளவும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.