தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் ஜனாதிபதி எவ்விதத்திலும் தலையிடவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் அழைப்பை ஏற்று தங்கள் செல்லவில்லை என்றும், நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கு மதிப்பளித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதனால் ஆணைக்குழுவின் சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.