இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1ஐ மீறியதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியபோது, யசஷ்வி ஜெய்ஸ்வால் அடித்த பந்தை பிடித்து, அவரை தாக்கும் விதத்தில் வீசியதால் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்காக, அவருக்குப் போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக ஜெய்டன் சீல்ஸுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதும் அவரது ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு புள்ளி குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.