கோப்பாயில் மீண்டும் கைது!
(ஆதவன்)
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும், இளைஞனும் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:-
முல்லைத்தீவு, சிலாவத்தையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 19 வயது இளைஞனும் காதலித்துள்ளனர். சிறுமி 6 மாதங்களுக்கு முன்னர் இளைஞனுடன் தப்பிச் சென்ற நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இளைஞனுக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தும், சிறுமியை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தும் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.
இந்த நிலையில் சிறுமி ஒரு வாரத்துக்கு முன்னர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமி வீட்டிலிருந்து தப்பி, மீண்டும் தான் காதலித்த இளைஞனுடன் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துள்ளார். இருவரையும் பாதுகாப்பு நோக்கம் கருதி கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.