தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல்வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இலங்கையில் தற்போது இயல்பு வாழ்வு திரும்பியுள்ள நிலையிலேயே அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம் மன்னாருக்கு வந்துள்ளனர். அவர்களை கடற்படையினரோ அல்லது பொலிஸாரோ கண்டுகொள்ளாத போதும் அவர்கள் தாமாக பொலிஸ் நிலையம் சென்று விபரத்தை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.