பொது வேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் - மத்திய குழு தீர்மானம் இதுவே என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்!
ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதுடன், பொதுவேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று (01.09) பல மணி நேரமாக வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய குழுக் கூட்டம் பல மணிநேரமாக இடம்பெற்றது. இதில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனை ஆதரிப்பதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், எமது கட்சி உறுப்பினராகிய அரியநேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 இல் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாக செயற்பட்டனர். தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டு சஜித் பிரேமததாச அவர்களுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்தனால் கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள் எனத் தெரிவித்தார். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.