ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால், சிலர் கலக்கமடைந்துள்ளனர். குறிப்பாக குறிப்பிட்ட ஒரு குடும்பம் பெரும் அச்சத்தில் உள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். இந்தக் கலக்கத்துக்கும் தாஜுதீன் கொலைக்குமிடையிலான தொடர்புகள் என்ன என்பது விசாரணைகள் மூலம் வெளிப்படும். கைது செய்யப்படுபவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.