யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தினமும் 7 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நெடுந்தீவில் நான்கு மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இரண்டு இயந்திரங்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.
இதனால், கடந்த இருவாரகாலமாக காலை 8 மணிமுதல் முற்பகல் 10:30 மணிவரையும், மாலை 2:30 மணிமுதல் மாலை 5:30 மணி வரையும் இரவு 1:30 மணிக்குப் பின்னரும் மின்சாரம் இடைநிறுத்தபடுகின்றது. இதனால், பெரும் சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம். நெடுந்தீவில் இரவு நேரத்தில் நடமாடும் சுருட்டைப் பாம்புகள் காரணமாக உயிராபத்தோடு வாழும் நிலையில், மின்வெட்டு நிலைமையை மேலும் பாரதூரமாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.