திருகோணமலை கப்பல்த்துறையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மீது நேற்று சிங்களக்காடையர் குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியாகத் தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரை நோக்கி சென்ற போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊர்தி பயணமானது கடந்த வெள்ளிக்கிழமை பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் -நல்லூர் பகுதியைச் சென்றடையவுள்ளது.
இவ் ஊர்திப் பயணம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.