2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை(30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் 8.30 மணியளவில் ஆரம்பமானது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பானது இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நவம்பர் மாதம் 01ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும் அன்றைய தினங்களில் வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது எதிர்வரும் 07ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.