பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களும், 15 பவுணுக்கு அதிகமான தங்கநகைகளும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, மாங்குளம், முறிகண்டி, வட்டக்கச்சி ஆகிய இடங்களில் நடந்த பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.