யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உணவகத்தில் வாங்கப்பட்ட மதிய உணவு சோற்று பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம்திங்கட்கிழமை உணவக உரிமையாளருக்கு எதிராக மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிதவான், உரிமையாளருக்கு 45ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் கடையை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளை வழங்கினார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் உணவகம் நேற்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.