சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் இலங்கையில் நடைபெறும் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கள் மதுரையில் முடிவடைந்துள்ள நிலையில் அதன் அடுத்த கட்ட படப்படிப்புக்காக இலங்கைக்கு வரவுள்ளதாக நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படம் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் , ரவி மோகன் ,அதர்வா , ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.