சந்தேக நபர் ஒருவரை சனிக்கிழமை கைது செய்யும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 51 வயதான காவல்துறை உத்தியோகத்தர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபருக்கும் மல்வத்துஹிரிபிட்டாய காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் போது சந்தேக நபர் காவல்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கியை கைப்பற்றி துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஆயுதத்துடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் பிங்கிரியவில் உள்ள இல்லத்தில் தலைமறைவாக இருந்த போதே குறித்த ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் 35 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.