தங்கம், வெள்ளி வென்றனர்
தேசிய மட்ட தடகளப் போட்டியில், 18 வயதுப் பெண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தலில், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவிகள் இருவர் தங்கப் பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். தியகம மஹிந்தராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் ஜெயரூபன் ரூபிகா 2.60 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், குகராஜ் வைஸ்ணவி 2.50 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.
jysj1n
jysj1n
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.