(செல்வன்)
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் (31) நேற்று மாலை ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் உருவப்படத்துக்கு, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களால் சுடரேற்றி மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2004ஆம்ஆண்டு, மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பில் வீதியில் வைத்து மூத்த ஊடகவியலாளர் நடேசன் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.