புதியவன்.
உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகளுக்கு 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் பாக்கியம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் படி இலங்கை மாணவர்களுக்கு 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
இதனடிப்படையில் க.பொ.த சாதாரண தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.