முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற மூன்று பெண்களில் இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் தையல் பயிற்சிபெறும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
குறித்த பெண்கள் நாயாற்றுக்கடலில் நீராடிக்கொண்டிருந்த போது அவர்களில் மூவர் திடீரென நீரில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.
நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரில் 47, 21 வயதுடைய இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் 20 வயதுடைய பெண் ஒருவரே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள்னர்.
இதேவேளை, காணாமல்போன பெண்ணை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.