முல்லைத்தீவு நாயாறு முகத்துவாரப் பகுதியில் நீராடச் செய்த யுவதியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடையார்கட்டு இருட்டுமடு பகுதியைச் சேர்ந்த (வயது20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
முல்லைத்தீவு நாயாறு முகத்துவாரப் பகுதியில் யுவதிகள் சிலர் ஒரு குழுவாக நீராடச் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக் கொண்டிருந்தபோது, மூன்று யுவதிகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து, அங்கு நின்ற மீனவர்கள் துரிதமாகச் செயற்பட்டு இரண்டு யுவதிகளை மீட்டுள்ளனர். எனினும், ஒரு யுவதியை மீட்க முடியாமல் போயுள்ளது. தொடர்ச்சியான தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.