நியூசிலாந்து ஆண்கள் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கேரி ஸ்டீட் விலகியதைத் தொடர்ந்து, ரோப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து பொறுப்பேற்கும் வால்டரின் முதல் பணி ஜூலை மாதம் சிம்பாப்வே சுற்றுப்பயணமாக இருக்கும். அவரது ஒப்பந்தம் 2028 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் முடியும் வரை நீடிக்கும்.
இந்த ஆண்டு ஏப்ரல் வரை தென்னாப்பிரிக்க வெள்ளை பந்து அணிகளை மேற்பார்வையிட்ட வால்டர், தென்னாப்பிரிக்காவின் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி பயணத்துக்கு பின்னர் பதவி விலகினார். அவரது பதவிக்காலத்தில் தென்னாப்பிரிக்க அணி, 2024 ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம் வரலாறு படைத்தது. அங்கு அவர்கள் எட்டு போட்டிகள் கொண்ட தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, பார்படோஸில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியத் தழுவினர்.
இந்தியாவில் நடந்த 2023 ஐ.சி.சி ஆண்கள் உலகக் கிண்ணத்திலும் அரையிறுதி வரை தென்னாப்பிரிக்கா செல்ல அணியை வழி நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.