24 மணித்தியால கடவுச்சீட்டு சேவை அடுத்த மாதத்துடன் நிறுத்தப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் அடுத்த மாதம் கடவுச்சீட்டு சேவை இயல்புநிலைக்கு திரும்பிவிடும். அதனால் 24 மணித்தியால சேவை அவசியமற்றதொன்றாகிவிடும்.
வழமை போல் 8 மணித்தியால சேவையே நடைபெறும். ஆயினும் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படுவதைப்பொறுத்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டைக் கொள்வனவு செய்வதில் எதுவித தடங்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.