புத்தாண்டு தினத்தில் சோகம்
வவுனியா - தவசிகுளம் பகுதியில் உள்ள நீச்சல் குளமொன்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். அவர் நீச்சல் குளத்தில் மூழ்குவதை அவதானித்தவர்கள், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும், சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.