கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில், மேலும் ஒரு சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இருவர் படுகொலை செய்யப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டு ஏற்கனவே தமது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே, மன்னார் - நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த பிறிதொரு சந்தேகநபர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 29 வயதுடையவர். அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.