இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் பயணமாகவுள்ள நிலையில் இருதரப்பு ரி-20 தொடரை பங்களாதேஷில் முதன்முறையாக இந்திய அணி விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகள் மற்றும் ரி-20 தொடரின் கடைசி இரு போட்டிகள் மிர்பூரிலும் 3ஆவது ஒருநாள் போட்டி மற்றும் முதல் ரி-20 போட்டி சட்டோகிராமிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 13ஆம் திகதி டாக்கா புறப்பட்டுச் செல்கிறது.
ஆகஸ்ட் 17ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டியும் 20ஆம் திகதி 2ஆவது ஒருநாள் போட்டியும், கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி 23ஆம் திகதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 26, 29 மற்றும் 31ஆம் திகதிகளில் ரி-20 தொடரிடன் போட்டிகள் யாவும் நடைபெறுகின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.