சுப்பர் 8சுற்றுக்கு தகுதி
(ஆதவன்)
பங்களாதேஷ் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாகத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ணத் ரி - 20 தொடரின் 21ஆவது ஆட்டம் இலங்கை நேரப்படி நேற்றிரவு இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
6 இலக்குகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. கிளாசன் 46 ஓட்டங்களையும், மில்லர் 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர். தென்னாபிரிக்க அணி 23 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து தடுமாறிய நிலையிலிருந்தே இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது. பந்து வீச்சில் சகிப் 3 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.
பதிலளித்து ஆடிய பங்களாதேஷ் அணியும் 50 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளை இழந்திருந்தது. ஹிரிட்டோ மற்றும் மஹமதுல்லா இருவரும் பங்களாதேஷ் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற போதும் இறுதிக் கட்டத்தில் அவர்களும் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 7 இலக்குகளை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 4 ஓட் டங்களால் தோல்வியடைந்தது. பந்து வீச்சில் கேசவ் மகாராஜ் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக கிளாசன் தெரிவானார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.