நவீன சவால்களை எதிர்கொள்வதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தைவிடவும் கடுமையான சட்டங்கள் அவசியம் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ் வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:-
சிலர் 'கோட்சூட்' அணிந்துகொண்டு பயங்கரவாதத்துக்கு வெள்ளையடிக்க முற்படுவது கவலையளிக்கின்றது. டொலர்களுக்காகவே அவர்கள் இவ் வாறு கதைக்கின்றனர். பயங்கரவாதம் என்றால் பயங்கரவாதம்தான். அதனை இனரீதியாக வகைப்படுத்தமுடியாது. 9/11 தாக்குதலின் பின்னர் பயங்கரவா தத்துக்கு எதிராக அமெரிக்காவில் கடு மையான சட்டங்கள் கொண்டுவரப்பட் டன. எனவே, இணையவழி ஊடான பயங்கரவாத நடவடிக்கை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி முன்னெடுக்கப்படும் நவீன பயங் கரவாதம் தொடர்பிலும் பாதுகாப்புத் தரப்பு விழிப்பாகவே இருக்கவேண்டும். அதற்குத் தேவையான சட்டங்கள் இயற் றப்படவேண்டும் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.