(புதியவன்)
நேற்று (14) கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்துக்குச் சென்ற இரண்டு பாடசாலை மாணவிகள் இன்னும் வீடுகளுக்குத் திரும்பவில்லை என அவர்களின் உறவினர்களால் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்களும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்துக்கு சென்றுள்ளதாகவும், அதில் ஒரு மாணவி தனது பெற்றோருடன் சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கினிகத்தேனவின் அக்ரஓயா மற்றும் நாவலப்பிட்டிவின் நாகஸ்தென்னவில் வசிக்கும் இரண்டு மாணவிகளும் நண்பர்கள் எனவும் பரீட்சை ஆரம்பிக்க முன்னர் பரீட்சை நிலையத்துக்கு அருகில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்ததை ஒருசில மாணவர்கள் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மாணவிகள் பற்றிய தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.