புதிய கல்வி ஊழியர்களை, உள்வாங்குவதற்கு பல்கலைக் கழகங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவ தெரிவித்துள்ளதாவது:
ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.கல்வி மற்றும் கல்விசாராப் பணியாளர்கள் தேவைகளுக்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு அமைவாக தற்போது அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயற்படுமொரு குழுவால் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்பு கோரிக்கைகள் ஆராயப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பல்கலைக்கழகங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவுள்ளன. அதற்கான நடைமுறைகள் நிறைவடைவதற்கு சிறிது அவகாசம் தேவையாக உள்ளது என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.