யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்ட சந்தேகநபர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டகுற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்தவர் என்றும், அவர் 24 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவரிடம் இருந்து மூன்று வாள்களும் 2 கிராம் ஹெரோய்னும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.