பழிவாங்கும் குணம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உண்டு. ஒரு மனிதன் நமக்கு தீங்கை ஏற்படுத்தினால் பல வருடங்கள் அது குறித்து நினைவில் கொண்டு பதிலுக்கு பழி வாங்கும் உயிரினம் என்றால் நாம் பாம்பைத் தான் நினைத்திருப்போம்.
ஆனால், அதிலும் பார்க்க நீண்ட காலம் அதாவது 17 வருடங்களுக்குப் பிறகும் பழிவாங்கும் ஒரு உயிரினம் என்றால் அது காகம் தான்.
2006 ஆம் ஆண்டு வொஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோன் மார்ஸ்லஃப் மற்றும் அவரது நண்பர்கள் நடத்திய ஆய்விலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அதன்படி குறித்த பேராசிரியரின் குழுவினர் முகமூடி அணிந்துகொண்டு காகங்களின் கால்களில் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சில ஆண்டுகள் கழித்து அதே முகமூடியை அணிந்துகொண்டு காகங்களுக்கு உணவளிக்கச் சென்றபோது அக் காகக் கூட்டம் அவர்களைத் ததாக்கியுள்ளன.
பின்னரும் 2013 ஆம் ஆண்டு வரையில் இதேதான் தொடர்ந்துள்ளது. ஆனால், 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காகங்களின் தாக்குதல்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளன.
எனவே இந்த ஆராய்ச்சியின் மூலம் காகங்கள் மிகவும் ஞாபகச் சக்தி மற்றும் தந்திரமானவை என்பது தெரிய வந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.