அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலையைச் சேர்ந்த குகன் பகிர்ஜன் என்ற மாணவன் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
குறித்த போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை12.10.2025 தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
இப் போட்டியில் குகன் பகிர்ஜன், அவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சானையைப் படைத்துள்ளமையை பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.