பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் குருதி உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருந்த நிலையில், அவருக்கு சா போலோ நகரிலுள்ள மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
79 வயதான லூலா டி சில்வா கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி தலைநகர் பிரேஸிலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தலைவலி அதிகரித்ததன் காரணமாக அவர் பிரேஸிலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் இரத்தம் உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூளையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.