பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த பலத்த மழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்ததுடன் பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.