பறைஞ்ச வாயும் கிழிந்த சீலையும் கிடவா. அறா விலை 'ரேட்டுக்கு'ஓட்டோ ஓடுறவையும் இப்பிடித் தான். அவையும் சும்மா இருக்காமல் தவிச்ச முயலை அடிக்கத் தான் எப்பவும் காவல் காத்துக்கொண்டு இருப்பினம். அப்பிடி யாழ்ப்பாணத்தில் ஓட்டோக்காரர் சொன்ன ரேட்டுக்கு வேறுவழியில்லாமல் ஆக்கள் ஏறுற இடங்களில் ஒண்டு ரெயில்வே ஸ்ரேசன். தூர இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் வாறவை. யாழ்ப்பாணம் ரெயில் ஸ்ரேசனில இறங்கி வெளியில வந்தவுடனேயே அவையை ஓட்டோக்காரர் சுத்திவளைச்சுப்போடுவினம். பக்கத்தில உள்ள சந்திக்கு போறதெண்டால் கூட முந்நூறு ரூபாவுக்கு குறையாம வராயினம். அரைக்கட்டை தூரத்தில இருக்கிற பஸ் ஸ்ராண்டுக்குப் போறதெண்டால் ஐநூறு ரூபாவை விட கூடத்தான் சொல்லுவினம். அவையின்ர மூட்டுக்கு ஏத்தபடியோ இல்லாட்டி வாற சனத்தின்ற தொகைக்கு ஏத்தபடியோ இந்த ஓட்டோக் களின்ர ரேட்டுகளும் ஏறி இறங்கும். கூடச் சனம் வந்தால். எப்பிடியும் ஓட்டோவுக்கு அவை அந்தரப் படுவினம். அதைவைச்சு ரேட்டைக் கூட்டிச் சொல்லி, அவையை ஏத்திக்கொண்டு போவினமாம். எல்லா ஓட்டோக்களுக்கும் மீற்றர் பூட்டோணும் எண்டு முந்தி இருந்த ஜீ.ஏ.ஓர்டர் போட்டவர். இப்ப அந்த ஓர்டரை எல்லாரும் குப்பையில போட்டிட்டு தங்கட இஷ்டப்படி ரேட்டை ஏத்தி இறக்கி விளையாடுகினம்.
இப்பிடி ரெயில்வே ஸ்ரேசனில ஓட்டோக்காரர் சொன்ன ரேட்டுக்கு சனம் தலையாட்டுறதுக்கு முக்கியமான காரணம், அங்க மினிபஸ்ஸோ இல்லாட்டி சீ.ரி.பி. பஸ்ஸோ வாறேல. மற்ற எல்லா மாவட்டங்களிலையும் ரெயில்வே ஸ்ரெசனில இருந்து ஒரு எட்டு வைச்சாலே ஏதோ ஒரு பஸ் வாற இடத்துக்குப் போடலாம். ஆனா யாழ்ப்பாணத்தில மட்டும் ரெயில்வே ஸ்ரேசனில இருந்து அரைக்கட்டைக்கு அங்கால தான் பஸ் ஸ்ராண்ட் இருக்குது. பயணக்களைப்போட. "பாக்" குகளைத் தூக்கிச் சுமந்துக்கொண்டு அவ்வளவு தூரம் நடந்து போறதுக்குள்ள சீவன் போடும். சரி, பஸ் ஸ்ராண்டுக்குப் போகாமல் ரெயில்வே ஸ்ரேசனில இருந்து தண்டவாளத்தையொட்டிக்கொண்டு போற ஒழுங்கையால போய் மெயின் றோட்டில ஏறினால் அதிலவாற பஸ்களில ஏறலாம்தான். ஆனால் அதி லையும் ஒரு சிக்கல் இருக்கு. பஸ் ஸ்ராண்டில இருந்து வெளிக்கிடேக்கையே எல்லாப் பஸ்களும் ஆக்களை அடைஞ்சு அடைஞ்சு பிள்ளைத்தாச்சியளின்ர வயிறு மாதிரி வீங்கிப் பெருத்துப்போய் அசைஞ்சபடிதான் வரும். அந்தச் சனத்துக்குள்ள பஸ்ஸில ஏறுறதெண்டால். எல்லாரும் ஒட்சிசன் சிலிண்டரோட தான் போகோணும். அந்தளவுக்கு மூச்சுக் கூட விடேலாபடிக்கு சனத்தை அடைஞ்சிருப்பினம். அப்பிடியெண்டால், பஸ் ஸ்ராண் டுக்குப் போனால் மட்டும்தான் சீற்றைப் பிடிச்சு இருந்து போகலாம்.
இதெல்லாம் ஓட்டோக்காரருக்கு நல்லாத்தெரியும். அதாலதான் செத்தமாட்டில பாலைக் கறக்கிற விளையாட்டுக் காட்டுகினம். ரெயினுக்குள்ள அவ்வளவு நேரம் பயணப்பட்டு, ஆய்ஞ்சு ஓய்ஞ்சு வாறவையிட்ட என்ன ரேட் சொன்னாலும் ஏறுவினம் எண்டநம்பிக்கை அவைக்கு. மீற்றரைப் பூட்டுங்கோ. நியாயமான ரேட்டைக் கேளுங்கோ எண்டு சொல்லுறதை ஒருக் காலும் அங்க நிக்கிற ஓட்டோக்காரர் கேக்கப் போற தில்லை. அவை நல்லா ரேட்டை ஏத்திச் சொல்லி ருசி கண்டிட்டினம்,அதால, இதை நிப்பாட்ட ஒரே வழி, ரெயின் வாற நேரங்களில மினிபஸ்காரரோ, சீ.ரி.பி. காரரோ சோர்ட் சேர்விஸ் (குறுந்தூர) பஸ்களை ஓடவிடோணும். அப்பிடிச்செய்தால்தான் உந்தப் பகல் கொள்ளையை நிப்பாட்ட முடியும். உரியவை செய்வினமோ?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.