செம்மனச் செல்வியிட்ட கூலியா புட்டை வாங்கித் திண்டிட்டு. அந்தப் புட்டுச் செமிக்கிறதுக்காகவாவது வேலை செய்யாமல் வலு கலாதியா படுத்து நித்திரை கொண்டதுக்காக ஆனானப்பட்ட சிவபெருமானேஇ அரசன்ர பிரம்பால அடிவாங்கினவர். அப்பிடிப்பட்ட அரசன்ர காலத்தில இருந்திருந்தாஇ சிவபெருமான் வாங்கினதைவிட எங்கட அரசாங்க உத்தியோகத்தர்மார் பிரம்பால ஒவ்வொரு நாளும் வாங்கிக் கட்டியிருப்பினம். அந்தளவுக்கு இருக்குது அவையின்ர வேலை செய்யிற சீத்துவம். உதாரணத்துக்கு ஒண்டை இப்ப சொல்லலாம்.
கிட்டடியில குப்பிளானில் இருக்கிற பள்ளிக்கூடம் ஒண்டில இரண்டு பிள்ளையளுக்கு ரீச்சர் அடிச்சுப் போட்டா. அதுவும் அங்க வழமையாப் படிப்பிக்கிற அரசாங்கச் சம்பளம் வாங்கிற ரீச்சருக்கு தன்ர வகுப்பில இருக்கிற பதினைஞ்சு பிள்ளையளைக் கவனிக்கக் கடும் கஷ்டமாம். அதால அவா தனக்கு உதவியா ஏ.எல். எடுத்த பிள்ளை ஒண்டை தற்காலிகமாக அங்க படிப்பிக்க வைச்சிருந்திருக்கிறா. அப்பிடி அங்க ரெம்பிறரியா படிப்பிக்கிற ஒரு தொண்டர் ஆசிரியர்தான் இப்பிடி பிள்ளையைப் போட்டு அடிச்சதாம். வகுப்புக்குப் பொறுப்பானபதினைஞ்சு பிள்ளையளைக் கவனிக்க ஏலாத அந்த ரீச்சரும் இந்தப் பிள்ளையளுக்கு அடிக்கிறதில எந்தக் குறையும் வைக்கிறேலையாம். அவா நடத்துற ரியூசனுக்கு இந்தப் பிள்ளையள் போகாததுதான் இந்த 'சிறப்பு பூசைக்கு' காரணம் எண்டு சொல்லுகினம்.
இப்பிடி பிள்ளையளுக்கு அடி விழுந்ததை எல்லாரும் சேர்ந்து முதலில மறைக்கத்தான் பார்த்தவை. 'அது ரீச்சர் அடிக்கேலை, பிள்ளையள் தங்களுக்குள்ள அடிபட்டதை இப்பிடி மாத்திச் சொல்லுகினம்' எண்டு வலயக் கல்விப்பணிப்பாளரே முழுப்பூசணிக்காயை சோத்துக்க மறைக்க வெளிக்கிட்டவர். கடைசியில அந்தப் பிள்ளையளின்ர பெற்றோர், பள்ளிக்கூடத்தில முறைப்பாடு செய்துபோட்டு, அப்பிடியே அந்தப் பள்ளிக்கூடம் எந்தப் பிரதேச செயலகத்துக்க வருகுதோ அங்கபோய், சிறுவர் உத்தியோகத்தரிட்டையும் புகார் குடுத்திருக்கினம். அதோட நிக்காமல் அவை நடந்த சம்பவத்தை பேஸ்புக்கில போட்ட பிறகுதான் பள்ளிக் கூடப் பிரின்சிபலில இருந்து சிறுவர் உத்தியோகத்தர் வரை எல்லாரும் பதறியடிச்சுக்கொண்டு. இந்தப் பிரச்சினையை அலசி ஆராய்ஞ்சு நடவடிக்கை எடுக்க வெளிக்கிட்டிருக்கினம். இதைப்பற்றி விசாரிக்க சிறுவர் உத்தியோகத்தர் பள்ளிக்கூடத்துக்குப்போய், அதிபரையும் ரீச்சர்மாரையும் விசாரிச்சுப் போட்டு. தன்ர அறிக்கையை எழுதிக்கொண்டு போட்டாராம். பாதிக் கப்பட்ட பிள்ளையளின்ர வீட்டைபோய் என்ன நடந்தது எண்டு அந்தச் சிறுவர் உத்தியோகத்தர் விசாரிக்கேலை. ஏனெண்டு கேட்டால், 'எனக்கு அவையின்ர அட்ரஸ் தெரியாது, அதால போய் விசாரிக்கேல எண்டு பதில் சொல்லியிருக்கிறார். தன்னட்ட முறைப்பாடு செய்யவந்த பெற்றாரிட்ட அவையின்ர அட்ரஸையே வாங்கி வைக்காத அளவுக்குத்தான் அவரின்ர அக்கறை இருந்திருக்குது. அதுக்குப்பிறகு கூட, ஆரிட்டையும் விசாரிச்சாவது பிள்ளையளின்ர வீட்டைக் கண்டு பிடிப்பம் எண்டு உத்தியோகத்தர் நினைக்கவேயில்லை. அறிக்கை எழுத விசயம் கிடைச்சா எதுக்கு வீணா அலையவேணும்? எண்டு நினைச்சாரோ, என்னவோ. உப்பிடியான ஆக்களுக்கு சிவபெருமானுக்கு பிரம்பால வெளுத்த அரசரைக் கொண்டந்துவிட்டால் தான் காஞ்சமெண்டாலும் வாங்கிற சம்பளத்துக்காவது ஏதும் செய்வினம் கண்டியளோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.