நாங்கள் பிழைவிட்டால்கூட அதை அடுத்தவையில சுமத்திப்போட்டு, எங்கட கை சுத்தம் எண்டு காட்டுறதில இஞ்ச இருக்கிறவை கடும் விண்ணர். இப்ப கிட்டடியில் ஒரு நியூஸ் கேள்விப்பட்டிருப்பியள். அண்டைக்கு ரணிலார் வரேக்க, பட்டதாரி ரீச்சர் மாருக்கு நியமனம் குடுத்தவர். அதில கிளிநொச்சிப் பட்டதாரி ஓராளுக்கு குடுத்த நியமனக் கடிதத்தை இப்ப திருப்ப வாங்கிட்டினமாம். என்ன ஏதெண்டு கேட்டால், அது உள்ளுக்க ஒரு மிஸ்டேக் நடந்திட்டுது' அதுதான் அவளுக்கு குடுத்த நியமனத்தை திரும்ப வாங்கிட்டம் எண்டு சொல்லுப்பட்டிருக்கு. அந்தப் பட்டதாரி ஏதும் பிழையான தகவலைக் குடுத்தால் தான் இப்பிடி நியமனம் குடுத்திட்டு திரும்பப் பறிக்கலாம்.ஆனால் அந்தப் பட்டதாரி உள்ளதை உள்ளபடி போட்டுத்தான் விண்ணப்பிச்சிருக்கிறார். அந்தப் பட்டதாரியில பிழை இல்லை. அப்ப எங்க தான் பிழை?
'இறையே தவறுடையான் எண்டு சிலப்பதிகாரத்தில சொல்லுற மாதிரி, பட்டதாரிகளுக்குப் போட்டிப் பரீட்சை வைச்ச பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிலதான் பிழையாம். அவை எக்ஸாம் வைச்சு, மார்க்ஸ் பதியேக்க இந்தப் பட்டதாரிக்கு மாறிப் பதிஞ்சு போட்டினம். அதாலதான் நியமனமும் குடுபட்டது.இத்தனைக்கும் அந்த எக்ஸாம் எழுதினவை என்னென்ன மார்க்ஸ் எடுத்தவை எண்டு உந்தப் பொதுச்சேவைகள் ஆணைக்குழு பப்ளிக்கா அறிவிக்கவுமில்லை. ஒரு போட்டிப் பரீட்சை நடந்தால் அவையின்ரமார்க்ஸை பப்ளிக்கா அறிவிக்கோணும். கிழக்கு மாகாணத்தில இதே எக்ஸாம் வைச்சு அங்க எல்லாருக்கும் என்னென்ன மார்க்ஸ் எண்டு வெளிப்படையா அறிவிச்சவை. இஞ்ச வடக்கில மட்டும் தான் ஏதோ பூதம் காக்கிற புதையல் மாதிரி அந்த மார்க்ஸை ஒளிச்சு வைச்சிட்டு. நியமனப் பட்டியலை வெளியிட்டவையாம். அதால தான் உந்தக் குளறுபடி.
ஓராளுக்கு இப்ப வேலை கிடைக்கிறதெண்டது குதிரைக்கொம்பு. அதிலையும் பட்டதாரியளுக்கு அரசாங்க வேலை கிடைக்கிறது நாடு கிடக்கிற கிடையில இன்னும் கஷ்டம். அப்பிடிக் கிடைச்ச ஒரு நியமனத்தை, அவை செய்யாத பிழைக்காக பறிக்கிறது எந்தவகையில நியாயம்? பிழை விட்டது பொதுச்சேவை ஆணைக்குழு, ஆனால் தண்டனை அந்தப் பட்டதாரிக்கு. இதென்ன கண்டறியாத நடை முறை. சரி, மார்க்ஸ் பதியிறதில பிழை விட்டவை என்ன செய்திருக்கோணும். இந்தப் பட்டதாரியை விட வேற ஆரும் கூட மார்க்ஸ் எடுத்தவை இருந்திச்சினம் எண்டால், அவைக்கும் நியமனத்தைக் குடுத்திட்டு, இந்தப் பட்டதாரியையும் வேலை செய்ய விட்டிருக்கோணும். அதுதான் சரியான முடிவா இருந்திருக்கும். இப்ப அந்தப் பட்டதாரி வேற எங்கையும் ஒரு பிரைவேட் கொம்பனியில வேலை செய்து கொண்டிருக்கேக்க, இப்பிடி அரசாங்க வேலை கிடைச்சிட்டுது எண்டு நம்பி, அந்தப் பிரைவேட் வேலையை விட்டிருந்தால் என்ன கதி? பிழையா மார்க்ஸ் பதிஞ்சவை வாங்கிக் குடுப்பினமோ? சனங்களின்ர வாழ்க்கையோட விளையாடுற உந்தத் திணைக்களங்கள், புள்ளியைப் பதிஞ்சதில தான் பிழை எண்டால், பிறகு எடுத்த முடிவு அதை விடப் பிழை கண்டியளோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.