ஐ.நா.வில் அறிவித்தது இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில், அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் உருவாக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட குழு பணிகளை முன்னெடுத்து வருகின்றது. புதிய சட்டவரைவு இம்மாதம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.