முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் உள்ள ஒருசில காலமாக வதியாத வீட்டிலிருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் வெள்ளிக்கிழமை நேற்று 10ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அவரது 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடிந்த பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.