புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் புதையல் தோண்டிய நான்கு பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே, அந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதையல் தோண்டியபகுதி விடுதலைப்புலிகளின் காலத்தில் முகாமாகச் செயற்பட்ட பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் இருந்து சான்றுப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.