ஹன்டர் மோட்டார்சைக்கிள் என்பன விபத்துக்கு உள்ளாகியதில் படுகாயமடைந்த வயோதிபர், மேலதிக சிகிச்சையின் போது உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த வேலன் கனகலிங்கம் (வயது-69) என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பலாலி வீதியில் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த 5ஆம் திகதி இந்த விபத்து சம்பவித்தது. இதன் போது மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த வயோதிபரும், அவருடைய மனைவியும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மேலதிக சிகிச்சையின்போது, நேற்று அந்த முதியவர் உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.