ஆதவன்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கைவிடப்பட வேண் டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் நடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இல்லா தொழிக்கப்பட வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் தரம் 8 வரை தவணைப்பரீட்சை நடத்தப்படுவது இல்லை. ஆனால், இலங்கையில் தான் முதலாம் தரத்திலிருந்து பரீட்சைகளை நடத்தி மாணவர்களை நெருக்கடிக்கு
உள்ளாக்குகின்றனர். புலமைப்பரிசில் பரீட்சை என்ற பெயரில் மாணவர்களைத் துன்புறுத்துகின்றார்கள். பெற்றோர் இவ்வாறான துன்புறுத்தல்களையும் நெருக்கடிகளையும் செய்கின்றனர். இதனால் மாணவர்கள் கடுமையான உளப்பாதிப்புக்கு உட்படுகின்றனர் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.