ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், ஹைதராபாத்தை வீழ்த்தி முன்னேற்றம் கண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிமுதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் வழக்கமான ஆட்டம் நேற்று எடுபடவில்லை. அணி 59 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் அபிஷேக்சர்மா. இஷான் கிஷான் வெறும் இரண்டே ஓட்டங்களுடன் வந்தவேகத்தில் பவிலியன் திரும்பினார். ட்ராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி இருவரும் படுமோசமாக விளையாடினார்கள். 29 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றார் ஹெட். நிதீஷ்குமார் 21 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற் றார்.அன்கிட் வர்மா மட்டும் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்றார். முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது ஹைதராபாத்.
பதிலுக்குக் களமிறங்கிய மும்பைக்கு ரோகித் சர்மா நல்லதொரு ஆரம்பத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட் டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கியவில் ஜக்ஸ் 36, சூரியக்குமார் யாதவ் 26, திலக் வர்மா 21, பாண்டியா 21 என சீரான பங்களிப்பை வழங்க. எந்தவொரு இடத்திலும் பதற்றத்தை உணராமல் வெற்றிபெற்றது மும்பை.
நீண்டகாலமாக புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திலிருந்த மும்பை தற்போது 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணியே கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.