எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நபர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) அதிகாலை எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பரகடுவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகளின் கணவருக்கு முதல் திருமணத்தில் ஒரு பிள்ளை இருந்ததாகவும், அவரும் அவர்களுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டின் உரிமை தொடர்பில் அவர் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதன்போது உயிரிழந்த நபர் தகராறில் குறுக்கிட்ட போது அவரது பேரனால் தள்ளிவிடப்பட்டதாகவும், இதன்போது தரையில் விழுந்து காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் எஹெலியகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.