பேருந்தின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புலோப்பளை, பளையைச் சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் என்ற 26 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 23 ஆம் திகதி காலை மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்துள்ளார்.
இதன் போது பயணிகள் ஏறும் போது அவர் இறங்கி ஏறியுள்ளார்.
இந்நிலையில், கரந்தாய் பகுதியில் இறங்கிவிட்டு ஏறும்போது பேருந்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த நிலையில்
கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.