போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் முதல் அனைத்துப் பிராந்தியப் பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி போதைப்பொருள் வலையமைப்புக்களை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில் தேவைக்கு ஏற்ப விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மற்றும் மோப்பநாய் பிரிவினரின் உதவிகளைப் பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் போதைப் பொருள்களைக் கடத்துதல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் சந்தேநபர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.