பதில் கடமைக் கொடுப்பனவுகோரி, அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பதில் கடமை கொடுப்பனவு வழங்காத கிராம அலுவலர் பிரிவுகளின் கடமைப் பொறுப்புகளிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமையுடன் விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது பதில் கடமைக் கொடுப்பனவுகள் உடனடியாக வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம் என்று அதன் செயலாளர் கு. சசிகலாத் தெரிவித்துள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட பதில் கடமைக்கொடுப்பனவுகள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுமானால். மீண்டும் நாடளாவிய ரீதியில் தாய்ச்சங்கத்தை இணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.